Mangadu Kamakshi Thuthi Paadal: Week 3

 

மாங்காடு காமாக்ஷி ஆறுவாரத் துதிப்பாடல்கள் 

மூன்றாம்  வாரப்பாடல் 

நீ அருளாவிடில் வாழ்வேது காமாக்ஷியே 
விளையாடல் சிவன் உடல் பாதி விளங்கும்  (நீ அருளாவிடில்)

உனை வணங்காவிடில் நான் வாழ்வதேது 
சங்கடங்கள் தீர்க்கும் தாயல்லவா - மன 
சஞ்சலங்கள் போக்கும் மருந்தல்லவோ!  (நீ அருளாவிடில்)

முக்காலமும் உணர்ந்த முதல் மணியே  - என் 
மூன்றாம் வாரமிதில் வரமளியே 
நாற்படை வீட்டினிலே கொலுவிருக்கும் 
நாயகியே! உயர் நவமணியே !  (நீ அருளாவிடில்)

எக்காலமும் எனக்குத் துணை நீயே - என் 
ஏழு ஸ்வரங்களின் இசை நீயே 
சிக்கெனப் பிடித்தேன் உன் திருவடியை - நீயும் 
சீக்கிரம் காட்டிடுவாய் அருள்வடிவை (நீ அருளாவிடில்)

No comments:

Post a Comment

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.