மாங்காட்டில் குடி கொண்ட தாயே



மாங்காட்டில் குடி கொண்ட தாயே

நீயாடும் விளையாடல் ஒன்றா - இன்று
நான்தானா கிடைத்தேனோ நன்றா?
சேய்வாடும் போதினிலே தாய்நீ - உன்
செயல்மறந்து நிற்பதேனோ வா நீ - உயர்
மாங்காட்டில் குடி கொண்ட தாயே - நீ
மனமிறங்கி அருள்செய்கு வாயே! - அம்மா (நீயாடும்)

சிவனோடு விளையாடல் செய்தாய் - அவன்
சினத்தாலே மாங்காட்டில் நின்றாய்
தவக்கோலம் தணல்மீது கொண்டாய் - நகர்
காஞ்சிதன்னில் மணக்கோலம் பூண்டாய் - உயர்
மாங்காட்டில் குடி கொண்ட தாயே - நீ
மனமிறங்கி அருள்செய்கு வாயே! - அம்மா (நீயாடும்)

தினந்தோறும் உனைநானும் தொழுதேன் - நீயும்
தீராத மனக்குறைகள் தீர்ப்பாய்
எனதன்னை உன் ஆடல் போதும் - நீ
ஏற்றிடனும் என்னை எப்போதும் - உயர்
மாங்காட்டில் குடி கொண்ட தாயே - நீ
மனமிறங்கி அருள்செய்கு வாயே! - அம்மா (நீயாடும்)

சிரமங்கள் நான்தருவேன் பொறுப்பாய் - அதி
சீக்கிரமே வாநீ என் பொறுப்பாய்
சிரம்தாழ்த்தி கரம்கூப்பி அழைத்தேன் - நீ
சிரித்தென்னை அணைத்தால் நான் தழைப்பேன் - உயர்
மாங்காட்டில் குடி கொண்ட தாயே - நீ
மனமிறங்கி அருள்செய்கு வாயே! - அம்மா (நீயாடும்)

பழமின்றி சென்றானே முருகன் - உன்
வரமின்றி நான்செல்லல் முறையோ
அழுகின்ற குழந்தைநான் பாராய் - உன்
அன்பாலே ஆறுதலைத் தாராய் - உயர்
மாங்காட்டில் குடி கொண்ட தாயே - நீ
மனமிறங்கி அருள்செய்கு வாயே! - அம்மா (நீயாடும்)

No comments:

Post a Comment

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita