Ramayana Dhyanam (Tamil)


Eka Sloki Ramayanam
ஆனந்த ராமாயண தியானம் 

ஆஞ்சநேயர் துதி

கோதண்ட தீக்ஷா குருராம நாமத்தை
நீதண்ட வாடியேன் செப்புதற்கு - கோதண்டா
மாருதியே அஞ்சனையாள் மைந்தனே நற்கருணை
வாருதியே நீ துணையே வா

பெருமாள் துதி

அண்டர் நம் துயரம் தீர அயோத்திமா நகரில் வந்து
தண்டகாரணியம் சென்று சமுத்திர மீ வணையைக்கட்டி
கொண்டுரா வணனைமாட்டக் கோதண்டங் கையிலேந்தி
புண்டரீககக் கண்ணன் ராமன் பொன்னடிக் கமலல் போற்றி

1 - வது பாலகாண்டம்

தேவர் குறை தீர்த்திடவே ராமா ராமா
மூவரோடு அவதரித்தாய் ராமா ராமா
தசரதர்க்குப் பாலகனாய் ராமா ராமா
புஜபலத்தோடு ஜனித்தாய் ராமா ராமா
கோசலைதன் கர்பத்தில் ராமா ராமா
கூசாமலே நீ பிறந்தாய் ராமா ராமா
தவமுனிக்கு உதவி செய்ய ராமா ராமா
கவனமுடன் பின் சென்றாய் ராமா ராமா
தாடகையை சங்கரித்தாய் ராமா ராமா
பாடபுகழ் தானடைந்தாய் ராமா ராமா
கல்லைப் பெண்ணாக்கு வித்தாய் ராமா ராமா
வில் வளைக்க மிதிலை சென்றாய் ராமா ராமா
ஜனகன்வர லாறு கேட்ட ராமா ராமா
தனக்குப்பதில் முனியுரைக்க ராமா ராமா
தனுசைக் கையிலெடுத்தாய் ராமா ராமா
மனதில் கிலேசமுற்றாய் ராமா ராமா
வில்முறிய சீதைக்கண்டு ராமா ராமா
நல்மணஞ் செய்து கொண்டாய் ராமா ராமா
மங்களங்கள் பாடவே ராமா ராமா
தங்கனீர் மிதிலைதனில் ராமா ராமா
பரசுராமர் வில்முறித்தீர் ராமா ராமா
கரசனமா வயோத்தி சென்றீர் ராமா ராமா
சீதையுடன் வாழ்ந்திருந்தீர் ராமா ராமா
சிறப்பவே அயோத்தி நகர் ராமா ராமா




2 -வது அயோத்தியா காண்டம்

அயோதிக்கரசனாக ராமா ராமா
ஆவதனில் தசரதனும் ராமா ராமா
உந்தனையே வேண்டிக்கொண்டார் ராமா ராமா
சிந்தை களித்திருந்தார் ராமா ராமா
சிற்றன்னை கைகேயியை ராமா ராமா
பற்றில்லாது கூனியுமே ராமா ராமா
பக்குவமாய்த் தான் கலைத்து ராமா ராமா
பரதர் முடி பெற்றிடவே ராமா ராமா
உத்திரவு கேள் என்று ராமா ராமா
ஊக்கமுண்டாக்கி விட்டாள் ராமா ராமா
தாய் மொழி தவராமலே ராமா ராமா
தவவேடம் தான் கொண்டாய் ராமா ராமா
தசரதரும் விசனம் கொள்ள ராமா ராமா
தானடைந்தாய் கானகமும் ராமா ராமா
சீதையுடன் புறப்படவே ராமா ராமா
லக்ஷ்மணர் கூடவந்தார் ராமா ராமா
பக்தரெல்லாம் புலம்பிடவும் ராமா ராமா
பலநீதி சொல்லி தானகன்றாய் ராமா ராமா
கங்கை கரை அடைந்தாய் ராமா ராமா
நங்கை சீதையுடன் ராமா ராமா
ஒடம்விட்ட குகனுடன் ராமா ராமா
உளவுகொண்டு அங்கிருக்க ராமா ராமா
சேனையுடன் பரதன் வர ராமா ராமா
சிறப்புடனே பாதுகைக்கு ராமா ராமா
பட்டங்கட்டி அரசு செய்ய ராமா ராமா
பரதரும் திரும்பிச் சென்றார் ராமா ராமா

3 -வது ஆரண்ய காண்டம்

அத்திரி முனியைக் கண்டு ராமா ராமா
அப்புறம் தண்டகம் சென்றாய் ராமா ராமா
கொடிய விராதகனை ராமா ராமா
மடிய சங்காரம் செய்தாய் ராமா ராமா
தண்டக வனத்து ரிஷிகள் ராமா ராமா
அண்டவர காத்து நின்றீர் ராமா ராமா
பஞ்சவடி தீரம் சென்றாய் ராமா ராமா
பர்ணசாலை கட்டி நின்றீர் ராமா ராமா
சூர்ப்பான் தம்பி என்றீர் ராமா ராமா
தம்பியால் பங்கம் அடைந்தாள் ராமா ராமா
வெம்பியமனம் வாடினாள் ராமா ராமா
கரதூஷ்ணாதியரை ராமா ராமா
வரைமுறை இட்டாள் ராமா ராமா
கோதண்டத்துக்குச் சிறையாக ராமா ராமா
கூகுரலிட்டோடி வந்தார் ராமா ராமா
சூர்பனகை தூண்டுதலால் ராமா ராமா
ஆர்ப்பரித்தான் ராவணனும் ராமா ராமா

மாரீசனை மானாகவர ராமா ராமா
மருமகனும் வேண்டிக்கொண்டான் ராமா ராமா
மாரீச்சன் மறுத்ததற்கு ராமா ராமா
தாறுமாறாய்க் கூறிவிட்டான் ராமா ராமா
சீதை முன்னே மான் வரவே ராமா ராமா
அதைப்பிடிக்க பின் சென்றாய் ராமா ராமா
அம்புபட்டு விழுந்தது மான் ராமா ராமா
நம்பும்படி கூக்குரலிட ராமா ராமா
சிந்தை கலங்கிடவே ராமா ராமா
சீதை வருந்தினாளே ராமா ராமா
ராவண சந்நியாசி வந்தான் ராமா ராமா
நிலத்தொட சீதையை ராமா ராமா
தேரின்மேல் எடுத்துச் சென்றான் ராமா ராமா
தெரிந்து எதிர்க்க ஜடாயுவும் ராமா ராமா
சிறகொடிந்து நிலத்தில் விழ ராமா ராமா
சீதை வரம் தந்து சென்றாள் ராமா ராமா
தேடி வரும் வழியில் ராமா ராமா
தென்பட்ட ஜடாயுவுக்கு ராமா ராமா
நல்வரமும் தந்தளித்தாய் ராமா ராமா
செல்வழியில் கவந்தன் வர ராமா ராமா
சேர எமலோகம் தந்தீர் ராமா ராமா
சபரிக்கு முக்தி தந்தீர் ராமா ராமா
நல்வரமும் தான் அளித்தாய் ராமா ராமா

4 -வது கிஷ்கிந்தா காண்டம்

ஹனுமான் எதிரில் வர ராமா ராமா
அவரால் சுக்ரீவனை ராமா ராமா
நேசங்கொண்டு யோசனைகள் ராமா ராமா
நீனிலத்தில் செய்துகொண்டீர் ராமா ராமா
சீதையின் நகைகளை ராமா ராமா
கண்டுமனங் கசிந்தீர் ராமா ராமா
சுக்ரீவன் தேற்றிடவே ராமா ராமா
துளைத்து விட்டீர் மாமரத்தை ராமா ராமா
வாலியை வதைத்து அவனை ராமா ராமா
வைகுந்தம் போக செய்தீர் ராமா ராமா
சீதையைத் தேடும்படி ராமா ராமா
சேதிசொல்லி விடுத்தீர் ராமா ராமா
நான்கு திசைகளிலும் ராமா ராமா
நலமுடன் தேடலுற்றார் ராமா ராமா
காடுமலை வனமெல்லாம் ராமா ராமா
கண்கூடாய்த் தேடுகிறார் ராமா ராமா

5 -வது சுந்தர காண்டம்

சீதை இருப்பிடத்தை ராமா ராமா
சம்பாதி உரைத்திடுவே ராமா ராமா
மயேந்திரம் ஏறியே ராமா ராமா
பாய்ந்தானே அனுமானும் ராமா ராமா
இலங்கணி அனுமானும் ராமா ராமா
கலங்கிட வடித்தானே ராமா ராமா
சீதையைத் தேடிக் கண்டாளே ராமா ராமா
சேதியடை யாளந்தன் ராமா ராமா
அசோகவன மழித்தான் ராமா ராமா
அசுரர்களை தான்வதைத்தான் ராமா ராமா
இலங்கைக்கு கொள்ளிவைத்து ராமா ராமா
கலங்கடித்தான் ராவணனை ராமா ராமா
சீதை தந்த சூடாமணி ராமா ராமா
அனுமானும் வாங்கி வந்தான் ராமா ராமா
இந்திரஜித்தின் அஸ்திரத்தால் ராமா ராமா
சந்திக்க அனுமானும் ராமா ராமா
ராவணனைக் கண்டு அனுமானும் ராமா ராமா
பாலாமைக்கும் புத்தி சொன்னான் ராமா ராமா
விதியை வெல்வாரில்லை ராமா ராமா
மதுவனம் அழித்தவர்கள் ராமா ராமா

6 -வது யுத்த காண்டம் 


சேதுவை அணைகட்ட ராமா ராமா
சேனையுடன் போய்ச் சேர்ந்தீர் ராமா ராமா
சரணமடைந்த விபீஷணனுக்கு ராமா ராமா
சிரஞ்சீவி பதட்டம் தந்தாய் ராமா ராமா
ராவணாதி யசுரரைக் கொன்றாய் ராமா ராமா
ராக்ஷதர் வேரற்றுப்போக ராமா ராமா
சீதையை சிறைநீக்கு விட்டாய் ராமா ராமா
விபீஷணனுக்கு முடிதரித்தாய் ராமா ராமா
அயோத்திக்கு திரும்பிவர ராமா ராமா
சேதுவிற்  குரைசெயதாய் ராமா ராமா
புஷ்பக விமானத்தில் ராமா ராமா
புண்ணிய முனிவரிடம் ராமா ராமா
போஜனம் அருந்தச் சென்றீர் ராமா ராமா
போகவிடுத் தனுமானை ராமா ராமா
பரனுயிரை காப்பாற்றிய ராமா ராமா
அயோத்தி நகர் வந்து சேர்ந்த ராமா ராமா
மகுடாபிஷேகங் கொண்ட ராமா ராமா
மகிழ்ச்சியுற வாழ்ந்திட்ட ராமா ராமா
குவலயத்தை ரட்சிக்கும் ராமா ராமா
குறைகளொன்றும் வாராது ராமா ராமா

ஆனந்த ராமாயணம் தியானம் சம்பூர்ணம்

~ ஓம் ~

10 comments:

  1. Thank you very much for this ananda ramayanam. I used to chant in my school days and was looking for the verses.

    ReplyDelete
  2. Hari Aum!

    Glad to know that you were able to find it in this blog. God bless us all.

    Nandini

    ReplyDelete
  3. Bhagyalakshmi SeshachalamJanuary 01, 2015 10:04 PM

    Thanks so much I was desperately looking for this, I had this book, but some pages were missing, now I am relieved, thanks so much

    ReplyDelete
    Replies
    1. Glad to know about it, Bhagyalakshmi ji :)

      Wish you a very Happy New Year!

      Hari Aum!
      Nandini

      Delete
  4. Hey can you send me dukh daridyrayam shiv mantra (in Sanskrit ) as PDF to my email add is ambica_dentalclinic@yahoo.com please

    ReplyDelete
  5. My mom used to recite it for so many years. Thanks a lot for this digital form

    ReplyDelete
    Replies
    1. Namaskaram. Glad to know that your mom would recite this. I am happy that you could find it here. You are very welcome. God bless us all.

      Hari Aum!

      Delete
  6. Jaisriram...very happy to get this sloka.. 55 years back my paati use to recite this and raghuveera gadyam.. I use to sit beside her and listen.. blessed to receive this today..ahoo bhaagyam.. thankyou 🙏🙏 jaisriram
    Geethasrinivasan

    ReplyDelete
    Replies
    1. Namaskaram. It is indeed a nice feeling to get hold of the songs and slokas that we listened to while growing up. I have similar memories of my grandmother :) Thank you for your kind thoughts and comments.

      Hari Aum.

      Delete

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita