Thodudaiyaseviyen Song


This was taught by my grandmom, Smt. R. Bhagyalakshmi. I am happy to have found this after so many years.

(தேவாரம்)
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளியது

தோடுடையசெவியென் விடையேறி ஓர் தூவெண் மதிசூடிக்
காடுடையசுடலைப்பொடி பூசி என்னுள்ளங் கவர்கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பனிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே.

முற்றலாமையிள நாகமோ டேனமுளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடு கலனாப்பலி தேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடையார் பெரியார்கழல்கையாற்றெழுதேத்தத்
பெற்றமூர்ந்த பிரமாபுரமேவிய பெம்மானிவ னன்றே.

அருநெறியமறை வல்ல முனியகன் பொய்கை அலர்மேய
பெருநெறிய பிரமாபுர மேவிய பெம்மான் இவன் தன்னை
ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே.

No comments:

Post a Comment

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita