மாங்காடு காமாக்ஷி ஆறுவாரத் துதிப்பாடல்கள்
ஐந்தாம் வாரப்பாடல்
அஞ்சுதல் வேண்டாமய்யா -- இந்த
அம்மனைத் துதிப்போர்க்கு ஆகாததில்லையய்யா --
கெஞ்சுதல் வேண்டுமய்யா -- நாம்
கேளாத வரம்கூடக் கொடுத்திடும் தெய்வமய்யா! -- (அஞ்சுதல்)
நல்நெஞ்ச முடையோர்க்கு நாளெல்லாம் நலமளிப்பாள்
கல்நெஞ்ச முடையோர்க்கும் காத்திருந்து அருள்புரிவாள்
உள்நெஞ்சி லொன்றுவைத்து புறமொன்றில் பேசுவோர்க்கும் -- வரம்
அருள் நெஞ்சமுடையவளாம் மாங்காடு அம்மனவள்! -- (அஞ்சுதல்)
ஓர்கையில் கிளியோடும் மறுகையில் கரும்போடும்
மங்கலக் காட்சிதரும் 'ஸ்ரீ சக்ரம்' உடையவளாம்
'ஐந்தாம் வார' மிதில்... ஐயங்கள் போக்கி நிற்கும் -- புவி
ஆளும் நாயகியாம் ஆனந்த ரூபிணியாம்! -- (அஞ்சுதல்)
