Mangadu Kamakshi Thuthi Paadal: Week 3

 

மாங்காடு காமாக்ஷி ஆறுவாரத் துதிப்பாடல்கள் 

மூன்றாம்  வாரப்பாடல் 

நீ அருளாவிடில் வாழ்வேது காமாக்ஷியே 
விளையாடல் சிவன் உடல் பாதி விளங்கும்  (நீ அருளாவிடில்)

உனை வணங்காவிடில் நான் வாழ்வதேது 
சங்கடங்கள் தீர்க்கும் தாயல்லவா - மன 
சஞ்சலங்கள் போக்கும் மருந்தல்லவோ!  (நீ அருளாவிடில்)

முக்காலமும் உணர்ந்த முதல் மணியே  - என் 
மூன்றாம் வாரமிதில் வரமளியே 
நாற்படை வீட்டினிலே கொலுவிருக்கும் 
நாயகியே! உயர் நவமணியே !  (நீ அருளாவிடில்)

எக்காலமும் எனக்குத் துணை நீயே - என் 
ஏழு ஸ்வரங்களின் இசை நீயே 
சிக்கெனப் பிடித்தேன் உன் திருவடியை - நீயும் 
சீக்கிரம் காட்டிடுவாய் அருள்வடிவை (நீ அருளாவிடில்)

Bhagavad Gita

Bhagavad Gita