Mangadu Kamakshi Thuthi Paadal: Week 4


 மாங்காடு காமாக்ஷி ஆறுவாரத் துதிப்பாடல்கள் 

நான்காம்  வாரப்பாடல் 

பல்லவி 
அம்மனைப் போலொரு அருள்தரும் தெய்வம் 
அகிலதிலுண்டோ உன் சக்தி போலே  (அம்மனை)

அனுபல்லவி 
உன் தலம் நாடி வந்திடும் பக்தர்கோடி 
வந்தோர்க்கு வாழ்வளிக்கும் கலியுகக் கடவுளம்மா (அம்மனை)

சரணம் 
நல்நான்கு வேதங்கள் போற்றிடும் நாயகியே 
நான்காம் வாரமிதில் நலம்பல செய்திடுவாய் 
மணல்தனில் பித்தனின் உருவம் தனைத்தரித்து 
மணவாழ்க்கைக் கொண்டவளே மகிழ்வினை அளிப்பவளே (அம்மனை)

கிளிமொழி பேசிடும்  கிள்ளையைக் கொடுப்பவளே 
கரத்தினிலே கிளியுடனே துலங்கிடும் ஈஸ்வரியே 
எளியேனின் இசையினிலே இன்புறுவாய் நீயே 
எடுத்ததெல்லாம் வெற்றி கொடுத்திடும் காமாக்ஷி (அம்மனை)

Bhagavad Gita

Bhagavad Gita