மாங்காடு காமாக்ஷி ஆறுவாரத் துதிப்பாடல்கள்
ஆறாம் வாரப்பாடல்
பல்லவி
காஞ்சியில் மணக்கோலம் ...மாங்காட்டில் தவக்கோலம்
கொண்டவள் காமாக்ஷி ...நீ தேவி..! (காஞ்சியில்)
அனுபல்லவி
சங்கரரும் துதித்த...மாங்காடு பதியினிலே....!
ஈஸ்வரனை வேண்டி அக்னியில் இருந்தவளே...! (காஞ்சியில்)
சரணம்
நீ அந்த வேளை தன்னில் ... ஈஸ்வரன் கண்மூடி
உலகினில் உதித்தாயோ ... எங்களுக் கருள்புரிய
ஏனிந்த கோலமென்று ... நானறிந்தேனம்மா ...!
ஏழையெனைக் காக்க அவதரித்தாய் அம்மா ....! (காஞ்சியில்)
ராகம் : பாகேஸ்ரீ
ஆறாம் வார மிதில் பாலோடு பழம்கொணர்ந்தேன்
நினைத்தது நடக்குமென்று கூறாய் இது தருணம்
பாசமுடன் நானே பலவோர்க்கும் ஈந்திடுவேன் ...!
நேசமுடன் உனக்கு நான்வைத்த பாலினையே ...! (காஞ்சியில்)

No comments:
Post a Comment
Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.